மிசா P.K.R என்று பிரபலமாக அழைக்கப்பட்ட
P.K.ராஜகோபால் (16 செப்டம்பர் 1941 – 17 பிப்ரவரி 2002) போரூரின் தந்தை என்று
அனைவராலும் போற்றப்பட்டார்.. போரூர் பேரூராட்சியாக உருவாக்கப்பட்டப் போது இவரே அதன் முதல் பேரூராட்சி
மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றார்..
“போரூர்” (போர்+ஊர்) பெயரிலே தெரிவதைப் போல பெரும்
பழங்காலத்தில் “போர் நடந்த ஊர்” என்று நம்பப்படுகிறது. பல்லவர்கள் காலத்தில் போரூர்
ஒரு கடுமையான போர் தளமாக இருந்ததாக கருதப்படுகிறது.
புதிதாய் உருவான போரூர் பேரூராட்சியில்
அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலை மேப்பாடு, மின்சாரம், பள்ளி கட்டிடம்,
இடுகாடு போன்றவற்றை இவரது நிர்வாக திறமையால் தொலைநோக்குப் திட்டங்களை தீட்டி குறுகிய
காலத்தில் சிறப்பாக செய்து முடித்தார்.
1௦௦௦ ஆண்டுகள் பழமை வாய்ந்த
குருஸ்தலமான ராமநாத ஈஸ்வரர் கோவிலுக்கு இவர் அறங்காவலராக பதவி வகித்தார்..
சென்னை
சைதாபேட்டையில் அமைந்துள்ள சைதாப்பேட்டை கூட்டுறவு வங்கியின் தலைவராக இவர் பதவி
வகித்தார்.
சைதாப்பேட்டை கூட்டுறவு வங்கி. |